இருப்புப் பாதைகள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தல்:
இருப்புப்
பாதைகள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தல்:
· இருப்புப் பாதைகள் அமைந்திருக்கும்
கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் கீழ்க்கண்ட பணிகளைச் செய்ய
கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
· இருப்புப் பாதைகளுக்குச் சேதம்
விளைவிக்கவோ, தண்டவாளங்களில் அதற்கு அடியிலுள்ள
அடிக்கட்டைகளில் இருக்கும் இணைப்புக் கருவிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்றும்,
· தண்டவாளத்தின் மீது கற்களையோ இதரத்
தடைகளையோ வைக்கக் கூடாது என்றும்,
· போக்குவரத்துக்காக
ஏற்படுத்தப்பட்டிருக்கும் இருப்புப் பாதை வாயில்களில்(Railway Gates) குறுக்கிடக் கூடாது என்றும் கிராம
மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.
· இருப்புப் பாதையில் அமைந்திருக்கும்
பாலங்களை பொது வழியாக உபயோகிப்பதால் ஏற்படக் கூடிய அபாயங்களையும், அது சட்ட விரோதமான செயல் என்பதையும் கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த
வேண்டும்.
· இருப்புப் பாதை வேலிகளுக்குள்ளாக
நடக்கும் குற்றங்கள் குறித்து இரயில்வே அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதுடன்
அவர்களுக்கு புலனாய்வில் உதவி செய்ய வேண்டும்.
· பெருமழை பெய்யும் நேரங்களில்
தண்டவாளங்களைப் பாதிக்கும் அளவுக்கு அருகாமையிலுள்ள ஏரிகள், கால்வாய்கள், பாலங்கள் வழியாக தண்ணீர் வருமேயானால்
அதற்குண்டான தடுப்பு நடவடிக்கை எடுக்கவும்,
உரிய
நேரத்தில் முன்னெச்சரிக்கையாக இரயில்வெ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவும்
வேண்டும்.
· எதிர்பாராத விபத்துள் நேரிட்டால் உடனடித்
தகவல்களை உரியவர்களுக்க்கு அனுப்புவதோடு,
பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவவும் வேண்டும்.
· சட்டம் ஒழுங்கு கெடும் நேரங்களில் இருப்புப் பாதைகளைக் காவல் காக்க கிராம
உதவியாளர்களை அனுப்பி வைக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள்
· கிராமத்தில் சட்டம் ஒழுங்கை நிலை
நாட்டுவதில் கிராம நிர்வாக அலுவலர் கடமைப்பட்டுள்ளார்.
· சட்டம் ஒழுங்கு சீர்குலையும் போது காவல்
துறையினருக்குக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் உதவி செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்
கிராம நிர்வாக அலுவலரே ஆவார்.
· காவல்துறை கிராமத்தில் யாதொரு குற்றமும்
நடவாதபடி தடுக்கும் போதும்
· குற்றங்களைக் கண்டுபிடிக்கும் போதும்
· மறியல்,
ஊர்வலங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சமூகக் கலவரங்கள், சாதிச்சண்டைகள் இவைகளின் போதும்
· வாரண்டுகளையும் மற்றும் சோதனை
வாரண்டுகளையும் நிறைவேற்றும் போதும்
· ஆக்கிரமிப்புச் சொத்தை ஜப்தி செய்து ஏலம்
போடுவதற்கான வாரண்டுகளை நிறைவேற்றும் போதும்
· பொது அமைதிக்கு எதிராக எழும் சட்டம்
ஒழுங்குப் பிரச்சனைகளின் போதும் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையினருடன் இணைந்து
உதவி செய்தல் வேண்டும்.
· மனித உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து உண்டாக்கும் சந்தேகத்திற்குரிய பொருள்கள் (நாட்டு
வெடிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள்) பொது இடங்களில் காணப்பட்டால் உடனே காவல்துறைக்கு அறிக்கை அனுப்ப
வேண்டும்.
· பண்டிகைக்கால விழாக்கள் அல்லது வேறு
நிகழ்ச்சிகளில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு உயிர்
ஆபத்து ஏற்படும் என் தெரிய வந்தால் உடன் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க
வேண்டும்.
· சட்டம் – ஒழுங்குப் பிரச்சனைகளைக்
கட்டுப்படுத்தவும் சமரசத் தீர்வு காணவும்,
அமைதிக்குழு
கூட்டம் நடத்திரவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க
வேண்டும்.
Subscribe to:
Posts
(
Atom
)