விடைக்கேற்ற வினா அமைத்தல்

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

விடைக்கேற்ற வினா அமைத்தல்

விடைக்கேற்ற வினா அமைத்தல்

(
எ.கா)
   
பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தார்?
இதற்கான வினாவைத் தேர்ந்தெடு:
 
அ. எட்டையபுரத்தில் பிறந்தவர் பாரதியார்.
ஆ) பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?
இ) பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தாரா?
ஈ) எந்த ஊரில் பிறந்தவர் பாரதியார்?

விடை : ஆ) பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?

சென்ற ஆண்டு நடந்த குரூப் 4 ல் கேட்கப்பட்ட வினாக்கள்

1.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர வேண்டும்

அ) இல்வாழ்க்கை வளர்வது எதனால்?
ஆ) வளர்பிறை போல் உயர்வது எது?
இ) இல்வாழ்க்கை வளரக் காரணம் என்ன?
ஈ) இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்.

2.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

கலிங்கத்துப்பரணிமுதலாம் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டது!
அ) கலிங்கத்துப்பரணியாரை பாட்டுடைத் தலைவனாகக்
கொண்டது?
ஆ) கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
இ) முதல் குலோத்துங்க சோழனைப் பாடிய நூல் எது?
ஈ) கலிங்கத்துப்பரணி சிற்றிலக்கியமா?

3.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

இளமை கல்விக்குரியது

அ) இளமையில் என்ன செய்ய வேண்டும்?
ஆ)கல்வியை எப்பருவத்தில் கற்க வேண்டும்?
இ) இளமை எதற்குரியது?
ஈ) கல்வி கற்கும் பருவம் யாது?

4.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழிநிலையைப் பொறுத்தே
அமையும்

அ) நாடு முன்னேற்றம் அடையக் காரணமென்ன?
ஆ) ஒரு நாட்டின் முன்னேற்றம் எதைப் பொறுத்து அமையும்?
இ) நாடு எவ்வாறு இருக்க வேண்டும்?
ஈ) நாட்டின் முன்னேற்றத்திற்கு மொழி அவசியமா?

5.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

ஔவையார் ஆத்திச்சூடி பாடினார்
அ) ஔவையார் எதனைப் பாடினார்?
ஆ) ஆத்திச்சூடியைப் பாடியவர் யார்?
இ) ஔவையார் பாடிய நூல்கள் யாவை?
ஈ) ஔவையார் ஆத்திச்சூடியைப் பாடினாரா?